Sunday 24 February 2013

ஆன்மாவால் இருவரும் ஒருவரே


மகான் ஸத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆன்மீகத்தின் மிக உயர் நிலையில் இருந்தவர். ஆரம்பத்தில் சேஷாத்ரி சுவாமிகளை பக்தர்கள் ‘பெரிய சேஷாத்ரி’ என்றும், பகவான் ரமணரை “சின்ன சேஷாத்ரி’ என்றும் அழைத்தனர். பக்தரல்லாத சிலர் சேஷாத்ரி சுவாமிகளை ’பெரிய பைத்தியம்’ என்றும் ரமணரை ’சின்ன பைத்தியம்’ என்றும் சொன்னதுண்டு. பகவான் ரமணரே கூட ஒருமுறை அண்ணாமலையில் மூன்று பைத்தியங்கள் இருக்கிறார்கள். ஒருவர் அருணாசலேஸ்வரர்; இரண்டாமவர், சேஷாத்ரி சுவாமிகள். மூன்றாவது தான் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சில பக்தர்கள் ரமணரை மூலவர் என்றும், சேஷாத்ரி சுவாமிகளை உற்சவர் என்றும் அழைப்பது வழக்கம். காரணம் ரமணர் ஒரே இடத்தில் நிலையாக இருப்பார். மூலவர் போல். ஆனால் சேஷாத்ரி சுவாமிகளோ உற்சவ மூர்த்தி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பார்.

ஒரு நாள்.. ரமண பக்தர் ஒருவர் ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சிவகங்கைக் குளத்தருகே சேஷாத்ரி சுவாமிகள் உட்கார்ந்திருந்தார். ரமணர் எப்படி இருப்பாரோ அதே போன்ற தோற்றத்தில், பத்மாசனமிட்டு, ஆடாது, அசையாது, கண்கள் எங்கோ நோக்கிக் கொண்டிருக்க, மகான் வீற்றிருந்தார்.

பக்தர் ஆச்சர்யத்துடன் மகானை வணங்கி “ரமணர் மாதிரியே நிஷ்டையில் இருக்கிறீர்களே, சுவாமி!” என்றார்.

உடனே சேஷாத்ரி சுவாமிகள் அதற்கு, ”அங்கே ஆனால் என்ன, இங்கே ஆனால் என்ன? எல்லாம் ஒண்ணு தான், போடா!” என்றார்.

உருவத்தில் தான் இரண்டு பேரும் வேறுபட்டிருக்கிறார்களே தவிர, உள்ளத்தால், ஆன்மாவால் இருவரும் ஒருவரே என்று உணர்ந்த பக்தர், மகானை வணங்கிச் சென்றார்.
மூச்சு பயிற்சி
தியான பயிற்சி


ஓம் பீச், கோகர்ணா

ஓம் பீச், கோகர்ணா
கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

கோகர்ணா பகுதியிலேயே பிரசித்தமான கடற்கரை இந்த ஓம் பீச் ஆகும். இங்கு பயணிகள் ஆன்மீகம், மகிழ்ச்சி, ஏகாந்தம் போன்ற எல்லா அம்சங்களையும் அனுபவிக்கலாம். ஓம் என்ற குறி (எழுத்து) வடிவில் இந்த கடற்கரை அமைந்துள்ளதால் இது ஓம் பீச் என்று அழைக்கப்படுகிறது.
Courtsey : Prem Shikhare

பயணிகள் இங்கு நீர்ச்சறுக்கு, படகுப்பயணம் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட வசதி உண்டு. அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள் துணையோடு பயணிகள் இவற்றில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு தேநீர் உணவகங்கள் மற்றும் குடில்கள் கடற்கரையை ஒட்டியே அழகாக காணப்படுவது சூழலின் அழகை மேலும் கூட்டுவதாக உள்ளது. இவற்றில் உள்ளூர் உணவு வகைகளை பயணிகள் ருசிக்கலாம்.
Read in English: Om Beach, Gokarna

ஓம்


ஓம்
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே.அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ''ஓ'' என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ''ம்'' என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ''ஓம்-ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரணவ ஒலியே நிலவி இருந்தது என்றும் , பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்.

இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ஓம். மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும்  "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்யாவது போல் உடலும் உயிரும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு. அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.

மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு.
" ம் '  ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்.

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும்.

அ  உ  ம்  என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

தனைச் சிலர் இப்படியும் கூறுவார்கள்: அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும்  இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.

இச் சிவசக்தி வடிவமே, சொரூபமேவரி வடிவில் "ஓ" என பிள்ளையார் சுழியாகவும்,"உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ,ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும்,சான்றோர்களும்  சொல்கிறார்கள்.

இதனை திருமூலர், திருமந்திரத்தில் :

" ஓமெனு   ஓங்காரத்   துள்ளே   ஒரு மொழி
  ஓமெனு   ஓங்காரத்   துள்ளே   உருவம்
  ஓமெனு  ஓங்காரத்    துள்ளே   பல பேதம்
  ஓமெனு  ஓங்காரம்   ஒண்முத்தி சித்தியே "

முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது ஒரே சொல்லாகவும்,ரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண்டம் தரிக்கும் பொழுதும்அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே தோன்றும் ,மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும், மூன்றெழுத்தையும் அதன்விளக்கத்தையும் , பேதங்கள் பலவாறாகவும் , நான்காவது வரிக்கு தைச் சதா உச்சரித்து தியானிப்பதால் முக்தி -  உயர்ந்த சித்தியும் கிட்டும் என்பதைப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

முதல் எழுத்து :
^^^^^^^^^^^^^
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி  "
                                   -- என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :

" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
-                                                                      --என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்கும் முதல் எழுத்தாகவும் இதுவே "அ" உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , சமஸ்கிருதம் முதலிய மொழியிலும்  இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு "
                                  -என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,

அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில் ,
" அவ்வாகி  உவ்வாகி மவ்வுமாகி ,
    - ஐம்பத்தோ ரெழுத்துக்கு ஆதியாகி "

"அகாமுதல் அவ்வைமுத்தும் ஆதியாகும்
 அறிந்தோர்க்கு திலேதான் வெளியதாகும் "
--என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்.
   ^^^^^^^^^^^^^^^^^^
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தபடி இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது. ஆண்டவன் இவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார் என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
 பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்                                      

"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு , அல்லது மேல் வாயைத் தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது உண்டாகும்எல்லா  ஒலியையும் விட மிகவும் யற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் துவே முதல்காரணமென  நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். து எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக இருந்துஅகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.

தை விளக்கும்படி திருமூலர்,

"ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும்" என்று கூறியுள்ளார்.ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம்  எனமித்து ஒலி எழுப்புவது.அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின்தோன்றிக் காத்தல் தொழிலையும் , மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே ணைத்து அடக்கி நிற்கும்.

"ஓம்" எனும் தாரக மந்திரத்தைத் தனிமையாக ருந்து ஏகாந்த தியானம்செய்தால் தன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம்அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும்,உலகையும் மறந்து நிற்க , ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து,அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் ல்லாத ஒன்றாகிவிடும்.ந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்
"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால்ஒழுக்கம் ஏற்பட்டு  உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். தன் மூலம் ஒளியைத் தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.
You see, there is no gain without pain.ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம்.ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படியொரு சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம்.வேகமாக
சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.

Lateral Thinking போன்றவை எளிதானவைதானே!

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதைஉண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல்  உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.அதிகாலை எழுந்ததும் , இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாதுபத்து நிமிட மணித்துளிகள்  ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்கவேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து டப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிடவேண்டும்.

இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில் குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது'ஓம்' என்ற மந்திரத்தை மனதால்நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும்.இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன் குறைந்து குறைந்து  இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும்.உள் சுழற்சியால் மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டுடிருப்பதாக சொல்லப்படும் குண்டலிஅல்லது குண்டலினி என்னும் சக்தி எழுப்பும்.குண்டலியும் அடியுண்ட நாகம் போல் ஓசையுடன் எழும்.  இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு ஆதரங்களில் பொருந்தி சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும்.
[ சித்தர்கள் 'விந்து விட்டவன் நெந்து கெடுவான்]என்பார்கள். காரணம் ந்த விந்துதான் பிரணாயமத்தின் மூலம் குண்டலி வழி சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம்.கீழ்  இறங்கினால் சிற்றின்பம்.

யோகியர் நாவை மடித்து தனை உண்ணுவார். இ ந்த ஒரு சொட்டு அமுதம் சுவைதால் பசி,தாகம்,தூக்கம் ல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம்.  அதுவே சிவநீர் என்பார்கள். தனை விழுங்கினால் நாமும் காயசித்தி பலனை அடையலாம்.

தனை திருமூலர் :                    
"ஏற்றி றக்கி ருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாள்ர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே "       - என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை.அவ்வாறு  இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு   இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை.அவ்வாறு அறிந்தவர்கள் எமனைஎதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற ன்பம் வ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா ருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை.தனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும்.உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும்சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே , விளக்கவே அர்த்தநாரீஸ்வரர்உருவமாக சரிபாதி உடல்.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 ஓம் என்பதன்  விஞ்சான நிரூபணம் -1
ஹான்ஸ் ஜென்னி என்னும் விஞ்ஞானி ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர்தான் ஒலியின் பரிமாணத்தை நம் பார்வைக்கு கொண்டுவந்தவர். இவர் கண்டுபிடித்த சாதனம் தான் டோனோஸ்கோப் (Tonoscope) என்னும் ஒரு வரலாற்று முக்கிய கருவி. இந்த டோனோஸ்கோப்பில் ஓம் என்று உச்சரித்தால் ஸ்ரீ சக்ரா எனப்படும் யந்திர உருவத்தை .காண முடியும் அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன். நீங்களும் உச்சரித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆனால் இந்த உருவத்தை நாம் வரைந்து வைத்திருப்பதை அதுவும் பல ஆயிரகணக்கான ஆண்டுகளூக்கு முன் ஒம் என்ற உச்சரிப்பின் பரிமானம் இது தான் என்று வேத ரிஷிகளும் முனிவர்களும் இதன் அர்த்தத்தை உணர்ந்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பெரிய உண்மை.


ஓம் பிராணாயமம் 
அதற்கு முன் இந்த ஓம் என்ற சொல் நம் மனித வாழ்வில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்தாலும் இதை நவீன விஞ்ஞானம்- இந்த சொல்லுக்கு ஒரு சூப்பர் பவர் என நிருபித்து உள்ளது……….ஓம் என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கபட்டதன் காரணம் அதற்குள் அடங்கிய பாசிட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் ஒரு நல்ல விஷயங்களுக்கான அதிர்வு தான் அந்த வார்த்தை.
ஆம் ஒரு சில கோயில்களிலும், அரண்மனைகளிலும், சில வீடுகள் மடங்கள் இந்த மாதிரி இடத்திலும் நீங்கள் காணக்கூடிய ஒரு ஸ்ரீ சக்கரம் (யந்த்ரம்) என்னவென்று பலருக்கு தெரியாது. பலர் இதை ஒரு செப்பு தகடின் கிறுக்கல்கள் என நினைத்திருக்கலாம். ஓம் என்ற சொல்லின் உருவம் அல்லது படிவம் தான் என்று சயின்ஸ் நிருபித்துள்ளது.
ஆம் ஹான்ஸ் ஜென்னி என்னும் விஞ்ஞானி ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர்தான் ஒலியின் பரிமாணத்தை நம் பார்வைக்கு கொண்டுவந்தவர். இவர் கண்டுபிடித்த சாதனம் தான் டோனோஸ்கோப் (Tonoscope) என்னும் ஒரு வரலாற்று முக்கிய கருவி. இந்த டோனோஸ்கோப்பில் ஓம் என்று உச்சரித்தால் ஸ்ரீ சக்ரா எனப்படும் யந்திர உருவத்தை .காண முடியும் அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன். நீங்களும் உச்சரித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆனால் இந்த உருவத்தை நாம் வரைந்து வைத்திருப்பதை அதுவும் பல ஆயிரகணக்கான ஆண்டுகளூக்கு முன் ஒம் என்ற உச்சரிப்பின் பரிமானம் இது தான் என்று வேத ரிஷிகளும் முனிவர்களும் இதன் அர்த்தத்தை உணர்ந்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பெரிய உண்மை.
சரி நம் ஓம் சொல்லுக்கு வருவோம்….
ஒம் பல மொழிகளின் பிரணவ மந்திரமாக, வடிவ, உருவ அளவில் வேறுபட்டாலும் இதன் ஒலி ஓங்கார நாதமாக ஒன்றாக இணைந்த அளவில் உள்ளது. ஒம் என்ற தமிழ் சொல்லிற்கு ஒ = அ + உ + ம் (அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்).
இதை பிராமண சொல் என்று கூறுபவர்களுக்கு இந்த ஓம் வடிவம் சட்டைமுனி சூத்திரத்தில் – ” ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு ” என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார். ஓ என்ற சொல் தாழ்ந்தும் ம் என்ற சொல் நீண்டும் இருந்தால் ஒருவித ஒலி அதிர்வுகள் கிடைக்கும். அது போக ஒ என்ற வார்த்தை உச்சரிக்கும் போது மூச்சை உள்ளே இழுத்து ம் என்றும் கூறும் போது எல்லா வாயுவையும் வெளியே அனுப்பும் இன்னொரு சான்றோரின் மூச்சு பயிற்சியின் சீக்ரெட்.

அது போக ஓ என்று ஜெபிக்கையில் நினைத்த நல்ல விஷயத்தை/உருவத்தை/விரும்பும்கடவளை நிலை நிறுத்தினால் ம் என்று கூறும்போது அது அப்படியே அந்த அதிர்வலை நம்மை சுற்றி சூழ்ந்து கொண்டு நல்லது நடக்கும் என உறுதியாகிறது. அது போக ஓம் என்ற ஒலியை நம் கேட்கும் போது சயின்டிஃபிக்காய் கெட்ட விஷயங்கள் தோன்றுவது தடைப்படும். நிறைய குழப்பங்கள் இருக்கும் போது இந்த ஓம் ஒலி அதிர்வின் எல்லையில் நாம் இருந்தால் நம் மனதும் தெளிவுபெறும் என்பது தெளிவாகிறது.
பகவத் கீதை ஒரு கற்பனை கதை அல்லது அது கிருஷ்ணின் அவதாரத்தை குறிக்கும் ஒரு வரலாற்று உண்மை என கூறுபவர்களுக்கு இதோ கீதையில் கூட ஓம் என்ற வார்த்தை வருகிறது பாருங்கள் கீதை – 8 – 13 “எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்.” ஓம் என்ற சொல் ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.
ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன.இவைமூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.

சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதி கூட தன் மனைவிக்கும் குடும்பத்தாருக்கும் கடிதம் எழுதும் போது ஓம் என்று முதலில் எழுதி தான் இந்த கடிதத்தை எழுதவே ஆரம்பிப்பானாம். இதை விட இதை 108 தடவை உச்சரிக்கும் ஒரு விஷயமும் அறிவியல் பூர்வ உண்மையை பல ஆன்டுகளுக்கு முன் கணித்த நம் மாமுனிவர்களின் விளக்கமும் சில ஆண்டுகளுக்கு முன் வான் வெளி ஆராய்ச்சி உண்மையும் ஒன்று தான்.
அதாவது சூரியன், சந்திரனின் சராசரி டயாமீட்ட்ர்களின் அளவு தான் பூமியின் தூரம். இது 0.5% சூரியனுக்கும் 2.0% சந்திரனுக்கும் என்ற சமீபத்திய துள்ளிய தூர விவரம் பல்லாயிர ஆண்டு இந்தியர்களின் அறிவை மெச்சுகின்றன.
ஓம் என்ற வார்த்தை பிராமணர்களின் சொல், அல்லது வட மொழி சொல், அல்லது இது ஆர்யர்களின் சொல் என்று சிலர் கூறலாம். இது உண்மையல்ல. பிரபஞ்சம் எப்படி கடவுளின் வடிவமைப்போ அது போலத்தான் இந்த ஓம் என்ற சொல்லும். சிந்து வெளி நாகரிகம் என்ன என்பது நம் எலோருக்கு தெரிந்ததே, பல்லாயிரகணக்கான வருடங்களுக்கு முன்பே அருமையாக கட்டபட்ட கட்டிடங்கள், நவீன மாட மாளிகைகள், பிரமாண்டமான வேலைப்பாடுகள் நிறைந்த நவீன கட்டமைப்பை கொண்டு வந்தவர்கள் தான் இந்த சிந்து வெளி சமூகம்.
இந்த சிந்து வழி சமூகத்தின் செங்கல்களில் கூட இந்த ஓம் என்ற சொல் இருந்ததாக தொல் பொருள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது பல நாடுகளில் பல மாதிரி கூறினாலும் இதன் வலிமையை உணர்ந்த முதல் ஐரோப்பிய மனிதன் ஹிட்லர் தான். சிந்த நதிக்கரையில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களை கொண்ட உலக பெருமைகள் கொண்ட நாடென்றால் அது இந்தியா என்னும் மாபெரும் நாடுதான்.

உலகத்தின் ஒவ்வொரு ஆளும் கண்களுக்கு இந்தியா தான் டார்க்கெட். அது பிரிட்டிஷ் ஆகட்டும், போர்ச்சூகீஸ் அகட்டும், பிரஞ்சு ஆகட்டும், ஜப்பானியர்கள் ஆகட்டும், மொகலாயர்கள் ஆகட்டும் இந்தியாவின் மீது கொண்ட ஆசை இங்கிருந்த கலாச்சாரம், விலை மதிப்பில்லா பொருட்கள் என அடுக்கிகொண்டே செல்லலாம். அதன்படி பார்த்தால் ஹிட்லரின் ஸ்வஸ்திக் சின்னமும் இந்த ஓம் என்ற சொல்லின் தழுவல் தான். இது ஹிட்லர் உபயோகிக்கும் முன் இந்துக்கள் இப்படி இருக்க காரணம் அவர்களிடம் உள்ள முதல் மந்திரமான ஓம் என்ற எழுத்துதான் என மேடிசன் கிரான்ட் என்பவரின் நூலே(தி பாஸிங் ஆஃப் கிரேட் ரேஸ்) இதற்கு சான்று.
அதை நிலை நிறுத்தி ஹிட்லரின் மூளையாக செயலபட்ட ஹென்ரிச் மூலரும் இதை கூறியுள்ளார். இதை விட அவர் கூறிய வார்த்தைகள் தான் மிகுந்த ஆச்சரியத்தில் உண்டாக்கியது அது அவர் எப்படி யூத இனத்தை அழிக்க ஹிட்லர் கமான்டை நான் உபயோகித்தேன் என்றால் ஒரு கையில் பகவத் கீதை மற்றும் ஹிட்லர் வார்த்தை கிருஷண பகவான் அர்ஜுனனுக்கு எப்படி ஒரு சத்திய வாக்கோ அதே தான் என்னுடைய பணியும் அது போல ஹிட்லரை நான் 11ஆவது கிருஷ்ண அவதாரமாக காண்கிறேன் என்று அவர் மட்டுமல்ல மேக்ஸ்னியானி போர்ட்டஸ் எனற பிரஞ்சு பெண்( பின்பு தன்னை சாவித்ரி தேவி என்று மாற்றி கொண்டவர்)கூட கூறுகிறார்.
இதற்கு மேலே இதை பற்றி நாம் பேசினால் பவர்ஃபுல் ஆர்யர்கள் நாங்கதான் என்று குரல் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒலிக்க இதற்கு போட்டி இருந்தது- இருக்கிறது.
ஓம் என்ற வார்த்தை ஒரு காலத்தில் நல்லது நினைத்து தியானம் கொண்ட முனிவர்களுக்கும் கெட்டது நினைத்து தவம் கொண்ட சில அரக்கர்களுக்கும் உருவான ஒரு காமன் லேங்குவேஜ் இந்த ஒம்.
ஓம் என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாதவர்கள் அவர்கள் மனதுக்குள் தியானம், யோகா, உடற்பயிற்ச்சி செய்யும் போது கூட இதை ஃபாலோ பண்ணினாலெ நிறைய மாறுதல்கள் உண்டாகும் என சவுன்ட் ஆஃப் ஹீலீங் கோட்பாடுபடி இது மரணத்தை கூட தள்ளி வைக்கும் ஒரு அற்புத செயல் என ஜொனாதன் கோல்ட்மேன் என்ற அமெரிக்க டாக்டர் கூறுகிறார். ஓம் ஓம் ஓம்…………. நன்றியுடன் ரவி நாகராஜன் …..


Saturday 23 February 2013

ஈசனின் 108 போற்றி




1.ஓம் அகிலேஸ்வரா போற்றி
2.ஓம் அகிலாண்டீஸ்வரா போற்றி
3.ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
4.ஓம் அம்பிகேஸ்வரா போற்றி
5.ஓம் அமுதீஸ்வரா போற்றி
6.ஓம் அமரேஸ்வரா போற்றி
7.ஓம் அனாதீஸ்வரா போற்றி
8.ஓம் அருணாசலேஸ்வரா போற்றி
9.ஓம் அத்தீஸ்வரா போற்றி
10.ஓம் அந்தகேஸ்வரா போற்றி
11.ஓம் அசரேஸ்வரா போற்றி
12.ஓம் ஆதீஸ்வரா போற்றி
13.ஓம் ஆனந்தீஸ்வரா போற்றி
14.ஓம் அவர்த்தேஸ்வரா போற்றி
15.ஓம் ஏகாம்பரேஸ்வரா போற்றி
16.ஓம் ஓங்காரேஸ்வரா போற்றி
17.ஓம் கடம்பேஸ்வரா போற்றி
18.ஓம் கங்கேஸ்வரா போற்றி
19.ஓம் கபாலீஸ்வரா போற்றி
20.ஓம் கார்த்தமேஸ்வரா போற்றி
21.ஓம் காரணீஸ்வரா போற்றி
22.ஓம் காளத்தீஸ்வரா போற்றி
23.ஓம் காமேஸ்வரா போற்றி
24.ஓம் கும்பேஸ்வரா போற்றி
25.ஓம் குற்றாலீஸ்வரா போற்றி
26.ஓம் குஸ்மேஸ்வரா போற்றி
27.ஓம் குமாரேஸ்வரா போற்றி
28.ஓம் குஞ்சேஸ்வரா போற்றி
29.ஓம் குபேரேஸ்வரா போற்றி
30.ஓம் கேதாரீஸ்வரா போற்றி
31.ஓம் கோதுமேஸ்வரா போற்றி
32.ஓம் கோட்டீஸ்வரா போற்றி
33.ஓம் கோகானேஸ்வரா போற்றி
34.ஓம் சங்கரேஸ்வரா போற்றி
35.ஓம் சத்தியகிரீஸ்வரா போற்றி
36.ஓம் சர்வேஸ்வரா போற்றி
37.ஓம் சரண்யேஸ்வரா போற்றி
38.ஓம் சங்கமேஸ்வரா போற்றி
39.ஓம் சக்கரேஸ்வரா போற்றி
40.ஓம் சந்திரேஸ்வரா போற்றி
41.ஓம் சண்டகேஸ்வரா போற்றி
42.ஓம் சப்தேஸ்வரா போற்றி
43.ஓம் ஜம்புகேஸ்வரா போற்றி
44.ஓம் ஜலகண்டேஸ்வரா போற்றி
45.ஓம் ஜாப்பீஸ்வரா போற்றி
46.ஓம் சிவனேஸ்வரா போற்றி
47.ஓம் சித்தேஸ்வரா போற்றி
48.ஓம் சிம்ஹேஸ்வரா போற்றி
49.ஓம் ஜீவனேஸ்வரா போற்றி
50.ஓம் சுந்தரேஸ்வரா போற்றி
51.ஓம் சூலேஸ்வரா போற்றி
52.ஓம் ஸூமேஸ்வரா போற்றி
53.ஓம் சூரியேஸ்வரா போற்றி
54.ஓம் ஜெகதீஸ்வரா போற்றி
55.ஓம் செப்பேஸ்வரா போற்றி
56.ஓம் சையகேஸ்வரா போற்றி
57.ஓம் சைலேஸ்வரா போற்றி
58.ஓம் சொக்கேஸ்வரா போற்றி
59.ஓம் சோமலிங்கேஸ்வரா போற்றி
60.ஓம் சோமேஸ்வரா போற்றி
61.ஓம் ஞானேஸ்வரா போற்றி
62.ஓம் தர்ப்பாரண்யேஸ்வரா போற்றி
63.ஓம் தர்மகேஸ்வரா போற்றி
64.ஓம் தணிகாசலேஸ்வரா போற்றி
65.ஓம் தாருவணீஸ்வரா போற்றி
66.ஓம் தானேஸ்வரா போற்றி
67.ஓம் தாரணேஸ்வரா போற்றி
68.ஓம் திரியம்பகேஸ்வரா போற்றி
69.ஓம் தியாகேஸ்வரா போற்றி
70.ஓம் தீக்ஷினேஸ்வரா போற்றி
71.ஓம் தீனேஸ்வரா போற்றி
72.ஓம் துந்தரேஸ்வரா போற்றி
73.ஓம் நந்திகேஸ்வரா போற்றி
74.ஓம் நந்தீஸ்வரா போற்றி
75.ஓம் நத்தேஸ்வரா போற்றி
76.ஓம் நடேஸ்வரா போற்றி
77.ஓம் நாகேஸ்வரா போற்றி
78.ஓம் நாடுகேஸ்வரா போற்றி
79.ஓம் நீலகண்டேஸ்வரா போற்றி
80.ஓம் நீலேஸ்வரா போற்றி
81.ஓம் பத்மேஸ்வரா போற்றி
82.ஓம் பரமேஸ்வரா போற்றி
83.ஓம் பட்டீஸ்வரா போற்றி
84.ஓம் பத்திகேஸ்வரா போற்றி
85.ஓம் பாரதீஸ்வரா போற்றி
86.ஓம் பாண்டேஸ்வரா போற்றி
87.ஓம் பிரகதீஸ்வரா போற்றி
88.ஓம் பீமேஸ்வரா போற்றி
89.ஓம் பீதாம்பரேஸ்வரா போற்றி
90.ஓம் பீமசங்கரேஸ்வரா போற்றி
91.ஓம் புரானேஸ்வரா போற்றி
92.ஓம் புண்டரிகேஸ்வரா போற்றி
93.ஓம் புவனேஸ்வரா போற்றி
94.ஓம் பூதேஸ்வரா போற்றி
95.ஓம் பூரணகேஸ்வரா போற்றி
96.ஓம் மண்டலீஸ்வரா போற்றி
97.ஓம் மகேஸ்வரா போற்றி
98.ஓம் மகா காளேஸ்வரா போற்றி
99.ஓம் மங்களேஸ்வரா போற்றி
100.ஓம் மணலீஸ்வரா போற்றி
101.ஓம் மவுலீஸ்வரா போற்றி
102.ஓம் யோகேஸ்வரா போற்றி
103.ஓம் வைத்தீஸ்வரா போற்றி
104.ஓம் ராமேஸ்வரா போற்றி
105.ஓம் ரோகணேஸ்வரா போற்றி
106.ஓம் லிங்கேஸ்வரா போற்றி
107.ஓம் லோகேஸ்வரா போற்றி
108.ஓம் வேங்கீஸ்வரா போற்றி

துளசி சித்தர், கர்ம நிவாரண சித்தர்கள் பூஜை

 கர்ம நிவாரண சித்தர்கள் பூஜை
ஆரோக்கியமாக வாழ துளசிச் இலையை தினமும் தின்று வந்தால் குடல்,  வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் வராது. ஜீரண சக்தியும், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் உடலில் ஏற்பட்ட படைச்சொரி  மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு  தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை  தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம்  துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன்  குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள  குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.